Monday, July 28, 2014

உறவு...

காதல் என்றேன்
இல்லை என்றாய்.
தோழன் என்றேன்
இல்லை என்றாய்.
சகோதரன் என்றேன்
இல்லை என்றாய்.
நான் யார் என்றேன்
தெரியவில்லை என்றாய்.

——-

காதல் என்றேன்
இல்லை என்றாய்.
தோழி என்றேன்
இல்லை என்றாய்.
சகோதரி என்றேன்
இல்லை என்றாய்.
நான் யார் என்றேன்
நான் தான் என்றாய்.

———

உறக்கம் என்றேன்
கனவு என்றாய்.
புத்தகம் என்றேன்
ஆசிரியர் என்றாய்.
மாலை என்றேன்
தேநீர் என்றாய்.
காதல் என்றேன்
வெட்கப்பட்டாய்.

———-

மாமா என்றாய்
அப்பா என்றேன்.
அத்தை என்றாய்
அம்மா என்றேன்.
மகள் என்றாய்
தாய் என்றேன்.
நான்? என்றாய்
மகன் என்றேன்.

~பாஜி.

Friday, July 25, 2014

ஒரு மாலை…

அழுதது.
வலித்தது.
பின் குளிர்ந்தது.
இறுதியாய் நகைத்தது.
கீழ்வானம் சிவக்கையில், மேகம் – அழுதது.
என் மார்பின் மேல் வந்து விழுந்த
அந்தப் பெரிய மழைத்துளி பட்டதும் – வலித்தது.
அடுத்த கணமே, துளி வந்து விழுந்த இடம் – குளிர்ந்தது.
அலுவலக அலுப்பில் கடுகடுவென்றிருந்த
அந்த வாய் – நகைத்தது.

————————
PS:
இது என் முதல் கவிதை முயற்சி. 

Monday, May 26, 2014

[Coming Soon] {Story} The Future

Some of you might be wondering what happened to this guy? (probably none, but I’d like to have my hopes up) It’s been over a month since he last blogged (bragged?). Has he started watching another one of those god awful series and going to come back and make a scene about it? Well, no. I’d been writing a story and just as I always do, I drift apart. So, this time I’m spending some more time, being patient in bringing you ‘The Future’ a little bit of a long story. It’s a science fiction and the title would just tell you more on what you are to expect. Just to make things interesting, the below is (kind of a trailer) in part of, possibly coming 3 parts of, ‘The Future’. Enter the Future!
—– 00000 —–
“You are saying that you are from, what 2014?”
“Yes”
“How do I believe you?”
“Well for starters, I don’t know where I am. Then, well in my time water was actually given to all the guests as soon as they come home. I don’t know what a GID is; I don’t know why you have a fifty foot door and a hundred feet wall in your home.”
“Not convinced”
“OK, are you good with history?”
“I think I am. If not, I can always Google.”
“Oh yeah, there’s that. So I can tell you some information about my past which would be ‘way past’ for you. Deal?”
“Deal”
“Before that, tell me where I am”
“You are in the Marathi state of the republic India”
“That’s a relief. (there are some spoilers here, so I’m taking it off). Oh by the way, back then it was called ‘Maharashtra’ and just ‘India’.”
“I know my history. Our state was called as Maharashtra before the language revolution.”
“Language revolution? Ok, I’ll ask what that is later. So, history then. Where do I start? Well, when I was about to leave, I saw the 2014 election results in India and one mister ‘Narender Modi’ won the election and became the prime minister of India”
—– 00000 —–
How do you like it?

Thursday, April 10, 2014

[Reading Experience] En Eniya Iyandhira [என் இனிய இயந்திரா]

பல ரசிகர்களால் 'வாத்தியார்' என்று அன்புடன் அழைக்கபடும் சுஜாதாவின் புத்தகம் பற்றி விமர்சிக்ககூடிய தகுதி எனக்கு உண்டா என்றால், இல்லை! இது பற்றி நண்பர் ஒருவருடன் பேசுகையில், 'விமர்சனம்' என்று எழுதாமல் 'புத்தகம் படித்த அனுபவம்' என்று எழுதுங்கள் என்றார்! எழுதாமலும் இருக்க முடியவில்லை! பின் வரும் இந்த அனுபவம், என்னுடைய சொந்த அனுபவம் மட்டுமே. பிடித்திருந்தால் 'லைக்குங்கள்' :) மேலும் பல அனுபவங்களை பகிர்கிறேன்!
இந்த புத்தகத்தின் பின்னல் எழுதியிருந்தது போல் தமிழ்நாட்டில் பத்திரிக்கை, புத்தகம் படிக்கிறவர்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு பெயர் தான் சுஜாதா. இதற்கு முன் சுஜாதாவின் 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' மற்றும் 'பிரிவோம் சந்திப்போம்' படித்திருந்தாலும் அவரின் அறிவியல் புதினம் படிக்க கிடைத்த முதல் புத்தகம் 'என் இனிய இயந்திரா'. டைரக்டர் ஷங்கரின் 'எந்திரனை' மறந்திருக்க மாட்டீர்கள்... அதே போல், அந்த படத்திற்காக அவர் சுஜாதா அவர்களுக்கு கொடுத்த 'Credit'-ஐயும் மறந்திருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்!

கி.பி. இரண்டாயிரத்து இருபத்தி இரண்டில் நடக்கும் கதை. இன்னும் எட்டு வருடங்களில் வந்துவிடும் என்றாலும், இந்த கதையில் சுஜாதா அவர்கள் காட்டியிருக்கும் புதுமை மற்றும் கற்பனைக்கு அளவே இல்லை! ஆயிரத்து தொள்ளாயிரத்து என்பத்தி ஆறில் எழுதிய கதை போலவே இல்லை! இப்பொழுதும் இதை நான் படிக்கையில் பல இடங்களில் மெய் மறந்து போனேன். மனிதருக்கு அவ்வளவு கற்பனைத்திறன்!
சோ, 2022-ல் இந்தியாவில் நடக்கும் ஒரு கதை. அந்த கால கட்டத்தில் பிள்ளை பெறுவதற்குக் கூட அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும்! மக்களின் பெயர்கள் அரசாங்கமே வைக்கும். அவையும், இரண்டு எழுத்து தான் இருக்கும். (ரவி, மணி, நிலா, ஜீனோ எக்ஸட்ரா). மக்கள் அனைவருக்கும் SSN போல, ஒரு unique எண் இருக்கும். சொந்த வீட்டை வாடகைக்கு விட அரசாங்க அனுமதி வேண்டும். வீடியோ காலிங் வசதி. பேசும் எந்திரம் (நாய், மற்றும் பல வடிவில்). மக்களின் சேவைக்கு இயந்திரங்கள் இருக்கும். மேற்கூறிய அனைத்தும் முப்பத்து ஆறு சாப்டர்கள் கொண்ட இந்த புத்தகத்தின் முதல் சாப்டரில் மட்டும் வருபவை! எப்பூடி?
நாட்டை ஆளும் பிரதமர் ‘ஜீவா’, அவரை கொலை செய்யும் நோக்குடன் இருக்கும் ஒரு புரட்சிப்படை ஒன்றின் உறுப்பினர் ‘ரவி’, அவனின் pet ‘ஜீனோ’ என்கிற ஒரு பேசும் இயந்திர நாய், ‘சிபி’ என்கிற ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர், ‘நிலா’ என்கிற அவனது (சிபியின்) மனைவி. இவர்களே இந்த என் இனிய இந்திராவை நடத்திச் செல்கிறார்கள். கதை போகும் போக்கில் சில இடங்களில் என்னை திடுக்கிட வைத்துவிட்டார் ஆசிரியர். எண்பதுகளில் இப்படி ஒரு கலாச்சாரத்தைப் பற்றி கற்பனை செய்ய முடியுமா என்று! மேலும் ஜீனோவை ஒரு புத்தகப் புழுவாக காட்டியிருப்பதும் அது அடிக்கும் சில சர்காஸ்டிக் (Sarcastic) ஜோக்கும் ரசிக்கும்படியாக இருக்கும்.
சென்னையின் மெட்ரோ ரயில் வருங்காலத்தில் எப்படி இருக்கலாம், சென்னையிலிருந்து டெல்லி செல்ல எடுக்கும் நேரம், மற்ற எந்திரங்கள் (Robots) பற்றி ஜீனோ அறிவது, மனிதர்களின் உணர்வுகள் பற்றி பேசுவது, சிறைச்சாலை எப்படி இருக்கும், விளையாட்டுக்கள் என்னவெல்லாம் இருக்கும், என்று தனக்கென ஒரு உலகமே படைத்திருக்கிறார் ஆசிரியர். இந்த அனுபவத்தை எழுதும்போது கூட பிரமிப்பு வருகிறது!
கதையை வழக்கம் போல Develop the hints ஸ்டைலில் சொல்ல வேண்டுமெனில்:
2022 - பேசும் இயந்திர நாய் – காணாமல் போன சிபி – கண்டுபிடிக்க முயலும் ரவி, நிலா – ஜீவாவை கொல்ல நடக்கும் சதி – நிலா-ரவியின் பங்கு – ஜீனோவின் மாற்றம் – நிலாவின் மனமாற்றம் – உண்மைச் சதி!
திடுக்கிடவைக்கும் பல திருப்பங்கள், நான் மிகவும் ரசித்து படித்த வெகு சில புத்தகங்களில் ஒன்றாக சேர்ந்துவிட்டது! ‘மீண்டும் ஜீனோ’ என்ற இப்புத்தகத்தின் அடுத்த பாகமும் என் வாசிப்பு பட்டியலில் சேர்த்தாகிவிட்டது!
இப்புத்தகத்தின் முகப்புரையில் சுஜாதா அவர்களின் அறிவியல் புதினம் பற்றிய விளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது. இளம் எழுத்தளர்களுக்கு வழிகாட்டியாய் இது இருக்கலாம் என்பதால், இதோ:
“விஞ்ஞானக் கதை என்பது விஞ்ஞானப்படி சாத்தியமாக இருக்க வேண்டும் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
தப்பு.
விஞ்ஞானக் கதைப்படி (சயின்ஸ் ஃபிக்ஷன்) என்பதின் தற்போதைய வடிவத்தில் அது எல்லையற்ற மிக விஸ்தாரமான கற்பனையாக இருக்கிறது. அதனால் மாற்று உலகங்களையும் மாற்று சித்தாந்தங்களையும் படைக்க முடிகிறது.
அதன் காலைகளில் இருளையும் ராத்திரிகளில் வெளிச்சங்களையும் தேவைப்பட்டால் அமைத்துக் கொள்ளலாம். அதன் கடவுள்கள் புரோட்டான் வடிவெடுக்கலாம். அதன் பெண்கள் மகப்பேற்றை ஒட்டுமொத்தமாக இழந்து மீசை வைத்துக் கொள்ளலாம்.. அதன் நாய்கள் பிளேட்டோவைப் பற்றியும் பிரும்மசூத்திரம் பற்றியும் பேசலாம்…
ஆயிரமாயிரம் மாற்று சாத்தியக் கூறுகளை ஆராயும் அற்புத சுதந்திரத்தைப் பேசுகிறது விஞ்ஞானக் கதை!
அதைப் பயன்படுத்தும்போது, அதன் புதிய விளையாட்டுக்களை ஆடும்போது ஒரேயொரு எச்சரிக்கைதான் தேவைப்படுகிறது. கதையில் இன்றைய மனிதனின் உணர்ச்சிகளுடன் ஆசாபாசங்களுடனும் ஏதாவது வகையில் ஒரு சம்பந்தம் அல்லது தொடர்பு காட்ட வேண்டும்! அப்போது தான் நமக்கு அதில் சுவாரஸ்யம் ஏற்படுகிறது!”
புத்தகம் உங்களுக்கு வேண்டுமெனில் எனக்கு எழுதுங்கள், தருகிறேன். படித்துவிட்டு நீங்களும் ஒரு அறிவியல் புதினம் படையுங்கள்!

Image Courtesy: Google

Wednesday, April 9, 2014

[Movie Review] The Man from Earth (2007)

I have a lot to do, with so little time. But, with all of this, I can't just take this movie away from my mind - I've decided to drag everyone in this.

I'm a fiction lover and everything that's not happened or probably never gonna happen attracts me a lot. This "The man from Earth" is a 2007 science fiction movie - more of a 'cult' movie. With fiction, the best theme is 'What if?'. Here's what IMDB says about this movie:
An impromptu goodbye party for Professor John Oldman becomes a mysterious interrogation after the retiring scholar reveals to his colleagues he never ages and has walked the earth for 14,000 years.
Interesting isn't it? Now did you notice the hero's last name was a pun? This is a very simple movie having complicated and complex questions with straight forward answers. You are meeting a guy who is Fourteen thousand years old and imagine the type of questions you have for him, when he's ready to answer 'em. Or, do you think he's just a fake, who just wants to pull your leg? This movie satisfied me with the type of questions that I wanted to ask to a man, who've lived this long. I can't believe how I've missed this movie so far and would definitely thank the man who shared this with me!
What makes this movie more interesting [than the actual synopsis shared above] is the audience, who get to ask questions to the so called the man who walked Earth for 14 thousand years. Six professors [a Biologist, a Psychiartrist, an Art-History professor & a religious, an Anthropologist, a Historian, and an Archaeologist], knowing very well in what they teach and a young, but a not-so-naive-student.
When the 'what ifs' and 'how coulds' are being answered, you'll feel yourself drawn into the movie, frame some questions of your own, which will, be asked and answered later on! The movie also has twists and turns, some of them will be unexpected and just tells you the wide imagination, the writer had! This is no action movie - no super powers - pure drama-science-fiction and the questions and answers are the swords and shields! There is actually a suspense as to if he really is 14 thousand years old or not in the movie, but in the end, it becomes clear. I wish they didn't clear that! Here's some interesting dialogues which I loved from the movie [saved the best for the last]!
"Where were you in 1292 A. D?" to which he says "Where were you a year ago on this date?"
"I have ten degrees, including all of yours..."
"No matter how outrageous we think it is, no matter how highly trained some of us think we are, there's absolutely no way to disprove it."
"Time. We can't see it, we can't hear it, we can't weigh it, we can't measure it in a laboratory. It's a subjective sense of becoming what we are instead of what we were a nanosecond ago, becoming what we will be in another nanosecond. TheHopis see time as a landscape, existing before and behind us, and we move... we move through it, slice by slice."
I understand the movie, but I quite don't get why they titled the movie this way! Highly recommended for those who love fiction!
Image Courtesy: Google

Thursday, March 6, 2014

[Book Review] 6174 - தமிழ்

க. சுதாகரின் “6174” நாவல் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன் எனக்கு இருந்த புத்தகம் மீதான மோகத்தை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது. நான்கு வருடத்திற்கு முன், Dan Brown-ன் “The Lost Symbol” புத்தகத்தை இரண்டு நாளில் படித்து முடித்தேன். அவ்வளவு பரபரப்பு அந்த கதை! பிளஸ், Dan Brown-ன் நாவல்கள் மீது அந்த சமயம் அவ்வளவு ஈர்ப்பு எனக்கு. இந்த புத்தகத்தினைப் பற்றி நான் கூறுவதற்கு முன், என்னைப்பற்றி நீங்கள் கொஞ்சம் (சத்தியமா கொஞ்சம் தான்) தெரிந்துகொள்ள வேண்டும். நான் ஒரு Mathematics Graduate. புத்தகம் மீதான ஆர்வம் எனக்கு வர, என் உயிர் நண்பன் எனக்கு பரிந்துரைத்த முதல் நாவல் – Dan Brown-ன் Digital Fortress. கணிதம், எண் கணிதம், இரகசியஎழுத்துக்கலை (Cryptography) என அந்த நாவலின் மூலம் Dan Brown என் மனதில் ஒரு பெரிய இடத்தைப் பிடித்துவிட்டார். விளைவு, 2007-ல் புத்தகம் படிக்கத்தொடங்கிய நான், அவர் எழுதிய அனைத்து நாவல்களையும் (இன்று வரை) படித்து முடித்துவிட்டேன். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் முன் புத்தகம் மீதான் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பிக்க, அதே Dan Brown-ன் Inferno நான் படித்து முடிக்க கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது! இப்படியிருக்க, ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் என் உயிர் நண்பனின் தலையீடு... இம்முறை 6174 புத்தகம் படி என்று கூறினான். 6174. கதையின் தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்க, கடைசியாய் நான் படித்த தமிழ் நாவல் பற்றி யோசித்துப் பார்க்கையில், அது கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன் – சுஜாதாவின் “பிரிவோம் சந்திப்போம்”. இக்கதையை (6174) படித்து முடித்த பின், இதற்கு இதை விட ஒரு அருமையான தலைப்பு வைத்திருக்க முடியாது என்றே தோன்றியது! 6174 புத்தகம் பற்றிய இந்த விமர்சனம் என்னுடைய சொந்த கருத்து மட்டுமே.
இனி புத்தகம் பற்றி...

இது ஒரு த்ரில்லர் கதை. தமிழில் நான் படித்த வரை (நான் படித்தவை மிக மிக குறைவு!), இது போல் வேகமாக செல்லும் மிஸ்ட்ரி-த்ரில்லர் நாவல்கள் குறைவு! நாவலைப்பற்றி Develop the hints ஸ்டைலில் சொல்ல வேண்டுமெனில்:
லெமூரியா-போர்க்கப்பல்கள்-விஞ்ஞானிகள்-தீவிரவாதிகள்-விண்கற்கள்-பழந்தமிழ் பாடல்கள்-புதிர்கள்-எண்கள்-திருவனந்தபுரம்-லோனார்-பீகார்-மியன்மார்-பிரமிட்.
புத்தகம் படிக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் எனக்கு சுதாகர் அவர்கள் இந்திரா சௌந்தர்ராஜன் போல முயற்சி செய்கிறார் போலும் என்று எண்ணினேன். என் எண்ணத்தை பல வகைகளில் தவிடு பொடியாக்கிவிட்டார். புத்தகம் ஆறு சாப்டர்களாக பிரிக்கபட்டிருக்கிறது. 1. ஆதி கதை, 2. ஒருங்குதல், 3. பயணம் 4. அடைவு, 5. இயக்கம், 6. பிறகு...
ஆறு சாப்டர்கள் என்று சொல்வதை விட ஆதி கதை மற்றும் ஒருங்குதல் (63 பக்கங்கள்) ஒரு சாப்டர் என்றும் மீதி அனைத்தும் (340 பக்கம்) ஒரு சாப்டர் என்றும் பிரித்துக்கொள்ளலாம்! முதல் சாப்டர் அறிமுகம் என்றால் இரண்டாம் சாப்டர் தான் பயணம். முதல் 63 பக்கங்கள் படிக்க எனக்கு ஒரு வாரம் ஆனது. அடுத்த 340 பக்கம் மூன்று நாளில் (Weekdays) படித்து முடித்துவிட்டேன்! அவ்வளவு வேகம்!
இப்புத்தகம் என்னை இப்படி கட்டிப்போட கதை ஒரு முக்கிய காரணம் என்றாலும், கதையின் பலமாக கணிதம், புதிர்கள் என என்னை ஈர்க்கும் சமாச்சாரங்கள். மேலும், பல இடங்களில் ஆசிரியரோடு என் personal கருத்துக்களும் ஒத்துப்போனது தான் முக்கிய காரணம். உதாரணமாக
“என்னதான் நாம கற்பனை பண்ணினாலும் நமக்கு அறிந்ததைக் கொண்டு மட்டுமே அறியாததை அறிய முடியும்.”
நானும் சில சமயங்களில் இது போல யோசித்திருக்கிறேன்! இது போல பரிமாணங்கள், சிந்தனைகள், 6174, கோலங்கள், பிரமிடுகள் என கதையின் போக்கில் வரும் சில (நமக்கு) தெரியாத சில விஷயங்களைப் பற்றி விவரிக்கும் இடங்களில் தெளிவு!
கதைக்கு வழக்கம் போல் ஒரு நாயகன், ஒரு நாயகி என்று இல்லாமல், கதையில் வரும் அனைவருமே முக்கிய பங்கு வகிக்கும் வகையிலும் என்னைக் கவர்ந்துவிட்டார், ஆசிரியர் சுதாகர் அவர்கள். தூத்துக்குடிக்காரர்! அவர் தமிழை ‘நான்’ ரசிக்காமல் இருக்க முடியுமா!
புத்தகத்தில் நான் கண்ட ஒரே நெகடிவ் பாயின்ட் – ஒரு சீனுக்கும் மற்றொரு சீனுக்கும் இடையில் போதிய இடைவெளி இல்லாமை. சென்னையில் ஒரு சீன், சிகாகோவில் ஒரு சீன், நியோர்கில் ஒரு சீன் என, இவைகளுக்கு இடைவெளி ஒரு பாரா மட்டுமே! வழக்கமாக தொடரும் ஒரு பாரா போல! அந்த பாராவில் ஒரு வரி படித்த பின் தான் இது வேற சீன் என்றே புரிகிறது. ஒருவேளை இது சில பல வருடங்கள் கழித்து நான் புத்தகம் படிப்பதால் ஏற்பட்ட பாதிப்பாக கூட இருக்கலாம். படித்தவர்கள் சொல்லுங்கள்!
ஒரு புத்தகத்தைப் பற்றி நான் எழுதும் முதல் போஸ்ட் இது. My First Book Review. Comments and Critics welcome.
புத்தகம் வேண்டுமானால் சொல்லுங்கள்...

Sunday, March 2, 2014

[55F] Two of Us

Have you heard of a 55F? It’s 55 fiction… as the name indicates, is all about keeping it short to exactly 55 words while building something fictitious. For more you can check out the WIKI link, HERE.

For those who hate reading long stories, Here's a 55F for you! This is for a contest here at Cognizant Blogs.

--------

“Yeah, right!”
“No, I’m serious. She did propose.”
The look on his face said he was not kidding. How could she chose him? He always thought ‘he’ would be the last person she would choose.
“I always thought her choice would be between you and me. Never considered him.”
“Yeah, that makes two of us.”
--------